Tuesday, March 31, 2009

ஏன் மதிமுக வை மாற்ற இரு திராவிட கட்சிகள் மட்டம் தட்ட முயற்சிக்கிறார்கள் !

கீழ்மட்ட தொண்டனின் கேள்வி பதில்

கேள்வி :
ஏன் மதிமுக வை மாற்ற இரு திராவிட கட்சிகள் மட்டம் தட்ட முயற்சிக்கிறார்கள் ?
பதில் :
மதிமுக ஈழ விடயத்தில் யாரையும் எதையும் விட்ட்க்கொடுக்காமல் களப்பணியாற்றி வருவதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதே ஈழ பிரச்சினை இப்போது தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சினையாய் உருவெடுத்துள்ளது. இதில் திமுக வின் துரோகத்தையும் காங்கிரஸ் அரசின் குள்ளநரித்தனத்தையும் மதிமுகவை விட யாரும் , ஏன் அதிமுகவும் மக்கள் மன்றத்தில் பேச முழுத்தகுதி கிடையாது.

கடைசி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் அதிமுக ஈழத்திற்கு முழு ஆதரவு என்பதை மக்கள் இன்னும் சந்தேக கண்ணோடுதான் பார்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது மதிமுகவே மக்களின் கண்ணாடி அல்லது மக்களின் மனசாட்சி என்பதில் உறுதியாகிறது.

மக்கள் மன்றத்தில் மதிமுக விருக்குள்ள நல்ல பெயர் அதன் பிரதிநிதிதுவதிலும் வெளிப்பட்டால் ஈழம் கிடைக்கும் வரை அதற்க்கான செயல்களில் மதிமுகவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்பதினால்தான் மதிமுகவை , மாற்ற திராவிட கட்சிகள் உதாசீனபடுத்துகின்றனர். உதாசீனம் என்பது தலைமையில் மட்டும்தான் உள்ளதே ஒழிய அங்குள்ள தொண்டர்களின் எண்ணம் வைகோ வை சார்ந்தே உள்ளது. இதுவும் அவர்களுக்கு மனக்குழப்பத்தை கொடுத்துள்ளது.மட்டுபடுத்தவும் முயற்சிக்கிறது.

No comments:

Post a Comment