Friday, April 3, 2009

சொந்த சம்பந்தியை கூட கவனிக்க அல்லது காப்பாற்ற முடியாத இத்தாலி அம்மையார் !

சொந்த சம்பந்தியை கூட கவனிக்க அல்லது காப்பாற்ற முடியாத இத்தாலி அம்மையார் !
இவர் இந்தியாவைக் காப்பாற்ற தேர்தல் அறிக்கை விடுகிறார் . இந்த சாவை விசாரணை செய்தால் சில பல உண்மைகள் வெளியே வரலாம் . ஆனால் நடக்குமா?

புதுடெல்லி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேராவின் மாமனார் ராnஜந்திர வதேரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கழுத்தில் ஒயர் சுற்றப்பட்டிருந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.


முதலில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து குடும்பத்தார் தரப்பிலோ அல்லது போலீஸ் தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 15 தினங்களுக்கும் மேலாக அவர் சிட்டி இன் என்ற விடுதியில் தங்கியிருந்தார். அவரது அறையில் ராnஜந்திர வதேராவின் உடலை விடுதி ஊழியர்கள் இன்று காலை 9.30 மணியளவில் பார்த்தனர்.


உடனடியாக அவரது உடல் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது கழுத்தில் சில காயங்கள் இருந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. மருத்தவமனை ஊழியர்கள் மற்றும் போலீசார் அது பற்றி எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


பின்னர் அவரது உடல் லோதி தோடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரியங்காவின் மாமனார் கடந்த சில காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. புருசன் கொலைக்கு காரணமே இவர் தான் என்று சுவன்னா சுவாமி எழுதி இருக்கிறான்... அது போல மாமனார் கொலைக்கு மகள் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete