Tuesday, April 21, 2009

திருமாவின் செய்தியும் - நமது பதிலும்.

செய்தியின் மூலம் :

http://election.dinamalar.com/news/2378/%E0%AE%AE.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.,---%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.,%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8.html


செய்தி கீழே உள்ளது அதற்கான மறுப்பு இப்போது தோழரிடமிருந்து :

  • திருமா விஜயகாந்தை போல பேச ஆரம்பித்துவிட்டார் . மதிமுக வைஎவரும் ஈழ விடயத்தில் குறை கூற முடியாது.
  • அதே போல் ஈழ விடயங்கள் தாம்தான் பேசவேண்டும் மற்றவர்கள் பேசக்கூடாது என்று எப்பொழுதும் மதிமுக நினைத்து இல்லை. அந்த விதியின் அடிப்படையில்தான் ஈழதிருக்கு நேர் எதிராக இருந்த அதிமுக ஈழத்தை அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்டத்திர்க்கு ஆளானது மதிமுகவின் பெரும் வெற்றி
  • திருமா எப்பொழுதும் எந்த இடத்திலும் ஈழகூட்டனியை பற்றி மதிமுகவிடம் பேசியது இல்லை. அவர் ஒரு வேலை பாமகவிடம் பேசியிருக்கலாம்.
  • இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை என்று ஒன்று ஆரம்பித்த நாள் முதல் , அதன் முழு செலவு தொகையும் மதிமுகவின் தொண்டனுடையது என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறோம் . அதை மதிமுக சுமையாக கருதவில்லை நேர்மாறாக அதை தன் கடமையாக கருதுகிறது.
  • ஈழத்தமிழர் விடயத்தில் karunaanithi எவ்வளவு நேர்மையானவர் என்பது உலகுக்கே தெரியும் . சோனியா அம்மையாரின் கெட்ட நோக்கம் உலகுக்கே தெரியும் . அது திருமாவிற்கு தெரியாதா ?
  • சரி எது எப்படி இருந்தாலும் பாமகவின் இப்போதைய நிலைமையை நாம் பாராட்டவிட்டாலும் திட்ட வேண்டிய அவசியம் இல்லை.
  • ஈழ விடயத்தில் கருணாநிதியை பார்க்கையில் ஜெயலலிதா எவ்வளோவோ மேல் என்பதே இப்போதைக்கு உண்மைகள்.
  • திருமா அவர்களே திமுகவை குளிர்விக்க நீங்கள் இப்படி பேசியுள்ளீர்கள் என்பது தெரியும். திமுக வோட்டு உங்களுக்கு விழவேண்டும் என்பது தேர்தல் கணக்கு அதற்காக சம்பந்தமே இல்லாமல் மதிமுகவை விமர்சிப்பதை நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள் .
  • இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் நீங்கள் எங்களின் மரியாதைக்குரிய பங்காளி அதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
  • சிதம்பரத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும் அல்லது பமாக வெற்றி பெற்றாலும் அது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தோழரின் வெற்றிதான்.
  • மதிமுக தேர்தலை புறக்கணிக்குமா என்றால் ..? ஈழத்தமிழர்களின் விருப்பம் அதுவல்ல . எனென்றால் நாங்கள் ஈழத்தமிழர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கும் அமைப்பு. கருணாநிதியின் விருப்பதிற்கு காங்கிரஸின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் துரோக கூட்டணி வெற்றி பெற நாங்கள் விடபோவது இல்லை. நீங்கள் விட்டுவிட்டீர்கள் என்பதைவிட அவர்களுக்கு பல்லாக்கு தூக்குகிறீர்கள் என்பது தான் எங்களின் வேதனை .

நட்புடன்

தோழர்.

------------------

1 comment:

  1. மதிமுக மற்றும் மதிமுக தொண்டர்களை குறை சொல்ல முடியாது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும் . நல்ல விளக்கங்கள் இன்னும் சில மணி நேரத்தில் ஒட்டு மொத்த ஈழ தமிழனையும் கொலை செய்ய மஹிந்தா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் . இது ஒட்டு மொத்த தமிழர் நலம் விரும்பிகளின் திட்டம் .

    இந்த நேரத்தில் தவற விட்டால் இனி எப்போதுமே ஈழ தமிழர்களுக்காக பேச முடியாது . எதாவது செயல் திட்டங்கள் இருக்கிறதா ? இது மதிமுகாவால் மட்டுமே சுயநலமின்றி செய்ய முடியும்

    ReplyDelete