காலை பத்து மணிமுதல் நமது குழு சென்னையை சுற்றி நிலவரத்தை சொன்னார்கள்.
- ஆளும் கட்சி யின் அழைப்பு என்பதால் (அல்லது மிரட்டப்பட்டதால், அல்லது எந்த ஆளும் கட்சி அழைப்பு கொடுத்தாலும்) பஸ்கள் ஓடவில்லை. அதன் காரணமாகவே பஸ் இல் பயணிக்கும் மக்கள் கூட்டம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
- வழக்கம் போல் ஆட்டோ ஓடுகின்றது.
- வழக்கம் போல் மகிழுந்து இன்ன பிற தனியார் வாகனங்களுக்கு குறைவில்லை.
- ரோட்டோர கடைகள் அனைத்து திறந்து உள்ளன.
- யார் அழைப்பு விடுத்தாலும் கடைகளை மூடும் வியாபாரிகள் கடைகளை மூடி உள்ளனர்.
- அரசாங்கம் நடத்தும் மது பானகடைகளுக்கு எந்த விடுமுறையும் இல்லை. வழக்கத்தை விட மிக நன்றாய் வியாபாரம் நடக்கிறது. இது அரசாங்கத்தின் அல்லது கருணாநிதியின் கேவலமான நடத்தையை காட்டுகிறது.திமுகவின் உண்மையான தொண்டனை கேவலப்படுத்துகிறது.
- நாம் பேசியவரையில் திமுக வில் எழுபது சதவீதம் பேர் கருணாநிதியின் இந்த நாடகத்தை விமர்சனம் செய்கிறார்கள் . அதன் வெளிப்பாடே நேற்று கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது.
- இன்றைய முடிவு திமுகவின் உண்மையான தொண்டர்கள் கருணாநிதியை விட்டு விலகியே , எதோ ஒரு நிர்பந்தத்திற்காக கட்சியில உள்ளார்கள்
- சென்னையின் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கம் உள்ளது. போக்குவரத்து நன்றாய் உள்ளது.
- கருணாநிதியின் நாடக பந்த் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது.
-பதினோரு மணி நிலவரம் . முழு விவரத்தோடு மாலை சந்திப்போம்.
No comments:
Post a Comment