Tuesday, June 16, 2009

தலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு

தலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு .

இயக்குனர் பாரதிராஜ அவர்களின் அலுவலகத்தை தாக்கியது தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் ,தன்மீதுகுற்றம் சுமத்தியதாக தலைவர் வைகோ அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் .



அதற்கான வாக்குமூலத்தை "இடைத் தரப்பு " ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் மூன்றாம் தியதி எழும்பூர் நீதிமன்றம் தலைவர் வைகோ அவர்களை நீதிமன்றம் வர பணித்துள்ளது.

பொதுமக்கள் குழப்பம் :

போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்வருக்கே இயக்குனரின் அலுவலகத்தை அடித்தவர்கள் யாரென்று தெரியாதென்றால் , பொதுமக்கள் மிகவும் குழம்பியும் அச்சத்தோடும் உள்ளார்கள் .

இயக்குனர் பாரதிராஜா அவர்கள் ஒருவேளை அவரே அவரது அலுவலகத்தை அடித்து நோருக்கிகொண்டாரோ ? தா. கிருட்டிணன் தன்னைத்தானே ஆள் வைத்து வெட்டிக்கொண்டு மதுரை வீதியில் செத்ததைப்போல !


No comments:

Post a Comment