கருணாநிதி தாம் அரசர் என்ற நினைப்பில் உள்ளாரா?
கருணாநிதி தாம் ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை மறந்து தாம்ஓர் அரசன் போலும் மற்றவர்கள் அவரது அடிமைகள் என்றும் நினைக்கறார்போலும்.
அவரது மமதையான செய்தியையும் அதற்க்கு நமது பதிலையும் இங்கே பாருங்கள் :
இரத்தத்தை பார்த்தே அஞ்சாத நாங்கள் பாலை கண்டா பயப்பட போகிறோம்: கருணாநிதி
அரசின் வேண்டுகோளை ஏற்காமல் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி அரசை பயமுறுத்த நினைத்தால் அது பற்றி அரசு கவலைப்படாது என்றும், இரத்தத்தை பார்த்தே அஞ்சாத நாங்கள் பாலை கண்டா பயப்பட போகிறோம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
நமது கருத்து :
ஒரு லக்ஷம் பேர் ரத்தம் கொட்ட கொட்ட செத்தனர் ஈழத்தில் . இங்கே தமிழ்நாட்டில் பதினெட்டு பேர் தமது ரத்த நாளங்கள் அருந்த நிலையில் தம்மையே எரித்து கொண்டனர் . அதெர்க்கெல்லாம் பயப்படாத அல்லது கண்டு கொள்ளாத கருணாநிதியா இந்த பாலை கண்டு பயப்படபோகிறார்.
மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக வரும் 22ஆம் தேதி பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுக்கலாம் என்றும், அதுவரை உற்பத்தியாளர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்டு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் செங்கோட்டையன், பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் ஆகியோர் பேசினர்.
இதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், கடந்த 8ஆம் தேதி இந்த பிரச்சனையை காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் எழுப்பிய போது உரியவர்களிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தேன். அவ்வாறு கூறியதுடன் இல்லாமல் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமியையும், மதிவாணனையும் அழைத்து இதற்கு முடிவு காண அனுப்பி வைத்தேன். அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற சங்கத்தின் தலைவர் செங்கோட்டு வேலனையும், செயலர் எஸ்.ஆர்.ராஜகோபாலையும் 8ஆம் தேதி பிற்பகலில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கு முன்பாக மற்றொரு சங்கத் தலைவர் முகமது அலி, அலுவலக பணியாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோரையும் அழைத்து பேசிய போது, வரும் 22ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கலாம் என்ற அரசின் கருத்தை ஏற்றுக் கொண்டு சென்றார்கள். ஆனால் செங்கோட்டுவேலனும், அவரது சங்க மற்ற பொறுப்பாளர்களும் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதுடன் 9ஆம் தேதியன்று காலவரையற்ற போராட்டத்தையும், சாலை மறியலையும் மேற்கொண்டார்கள்.
உறுப்பினர்கள் அப்பாலும் (பால் உற்பத்தியாளர்கள்), இப்பாலும் (நுகர்வோர்) பேசினார்கள். நான் எப்பால் நிற்பது என்பது தெரியவில்லை. துவாக தமிழகத்தில் மக்கள் பாலை ஒரு புனிதமான பொருளாக கருதுவார்கள். லட்சுமி என்று கூட சொல்வார்கள். அந்த பாலை நடுத்தெருவில் நின்று கொண்டு கொட்டி பால் ஊற்றும் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
பால் ஊற்றுவது என்பது கடைசி காலத்தில்தான் செய்வார்கள். அமங்கலமான முறையில் அவர்கள் நடத்திய போராட்டத்தை உறுப்பினர்கள் சரி என்று ஒப்புக் கொள்கிறார்களா? அதற்காக நான் அதை அலட்சியப்படுத்துவதாக நினைக்கக் கூடாது.
தற்போது ஆவின் நிறுவனம் சுமார் 333 கோடி அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் பாலுக்கு மானியம் கொடுத்தால் அந்த நிறுவனம் என்னவாவது. அதே சமயம் பால் உற்பத்தியாளர்களின் கஷ்டமும் எனக்கு தெரியும். நுகர்வோரின் கஷ்டமும் எனக்கு தெரியும்.
நமது கருத்து :
ஒரு லிட்டரின் தண்ணீர் விலை இப்பொழுது பதினாறு ரூபாய் . பாலும் அதே விலைக்குத்தான் விற்கிறது. அடுத்தும் போக எந்த அடிப்படையில் இரண்டாயிரம் கோடி ரூபா செலவில் இலவச தொலைகாட்சி கொடுக்கிர்றார். அதில் இவரது குடும்பத்திற்கு லாபம் என்பதால்தானே.
எனவே 22ஆம் தேதி வரை பால் உற்பத்தியாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை எங்களுக்கு சட்டமன்ற பணிகள் உள்ளன. அதற்கு பிறகு அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம். நான் ஏற்கனவே நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தும் அவர்கள் பால் ஊற்றும் போராட்டம் நடத்தியது சரியா?
இதற்கு மேலும் அவர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் பாலை அவர்கள் கீழே ஊற்றிக் கொள்ளட்டும். போராட்டம் நடத்தி இந்த அரசை பயமுறுத்த நினைத்தால் அது நடக்காது. இரத்தத்தை கண்டே பயப்படாத நாங்கள் பாலை கண்டா பயப்பட போகிறோம். எனினும் 22ஆம் தேதி வரை பொறுத்திருங்கள். நல்ல முடிவு ஏற்படும். அப்படி நல்ல முடிவு ஏற்படாவிட்டால் அதன் பிறகு போராடலாம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
Friday, July 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment