Tuesday, August 11, 2009

தானாக வந்தார் தானாகவே சென்றார் .

கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் வகையறாக்கள் திமுகவில் இணைந்து உள்ளார்களே ?


ராதா
கிருஷ்ணன் சிறு குறிப்பு :


திமுகவில் இருந்தார் வைகோ வின் உதவியால் கோவில்பட்டி சட்ட மன்றதேர்தலில் நின்றார் .
பின்பு மதிமுக ஆரம்பித்த உடன் மதிமுக சென்றார்.(இங்கும் இரு முறை சட்ட மன்ற தேர்தலில் நின்றார் )
பின்பு திமுக சென்றார்.(எனக்கு எம்பி சீட் கொடுப்பதாக சொல்லி அழைத்துள்ளார்கள் என்றார்)
பின்னர் அதிமுக சென்றார்.(எதற்கு என்று தெரியவில்லை )
அதன் பின்பு மீண்டும் திமுக சென்றார்.(எதற்கு என்று தெரியவில்லை )
அதற்கும் அடுத்து மீண்டும் மதிமுக சென்றார்.(ஆறு மாதங்கள் கெஞ்சி கூத்தாடி அதன் பின் வைகோ என்ற ஒற்றை தலைவரின் விருபதிர்காகவே இவர் மதிமுக வில் சேர்த்து கொல்லப்பட்டார் , இவரை சேர்க்க வைகோ பல பேரை சமாதான படுத்த வேண்டியிருந்தது )

கடைசியாக இரண்டாவது மீண்டுமாக திமுக சென்றுள்ளார்.

மக்கள் பனி செய்வதற்கு அவருக்கு எவ்வளவு வேகம் சுறுசுறுப்பு பாருங்கள்.

நன்றாய் இருக்கட்டும் .

தோழர்.

Friday, August 7, 2009

பஸ்களில் விளம்பரங்களை அகற்ற ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


பஸ்களில் விளம்பரங்களை அகற்ற ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ள விளம்பரங்களை அகற்றுவது தொடர்பான காலக்கெடுவை நிர்ணயித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை நுகர்வோர் தன்னார்வ அமைப்பு சார்பில் கதிர்மதியோன் என்பவர் மனு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் படி பஸ்களின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளிலோ, பக்கவாட்டிலோ விளம்பரம் செய்யக் கூடாது. ஆனால், இந்த விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் பஸ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, சாலையைப் பயன்படுத்துபவர்களின் கவனம் திசைமாறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்ட விரோதமாக செய்யப்பட்டுள்ள இந்த விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

மறுபடியும் குழப்பம் தமிழர்களை எமாற்றும் நாடுகள் ?

மறுபடியும் குழப்பம் தமிழர்களை ஏமாற்றும் நாடுகள் ? -

பத்மநாதன் எங்கள் நாட்டில் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து பிரதமர்


புலிகள் அமைப்பின் புதிய தலைவராக செயல்பட்டு வந்த செல்வராசா பத்மநாதன் தங்கள் நாட்டில் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து பிரதமர் அப்சித் வெஜ்யஜிவா கூறியுள்ளார்.

பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.''

பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை என்று உறுதியாக கூறமுடியும்.

அவர் வேறு ஏதோவொரு நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கலாம்'' என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மலேசியாவில் தான் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று் சில இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saturday, August 1, 2009

கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,

கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,
அதற்கு துரோகம் செய்யும் இந்திய தமிழக அரசுகள் ..
கையறு நிலையில் தமிழ் மக்கள் ...

தாண்டவமாடும் வறுமை ..
அந்த வறுமையை பயன்படுத்தி-
வாக்குகளை பெரும் பணக்கார-
பேரம் பேசும் அரசியல்வாதிகள்...
உண்டு கொழுக்கிறான் ஊழல் அரசியல்வாதி ..
வறுமையில் வாக்கை விற்கிறான்
ஜனநாயகத்தில் உள்ள நவீன பிச்சைக்காரன் .

கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,
அதற்கு துரோகம் செய்யும் இந்திய தமிழக அரசுகள் ..
கையறு நிலையில் தமிழ் மக்கள் ...

-தோழர்
www.mdmkonline.com