Friday, August 7, 2009

மறுபடியும் குழப்பம் தமிழர்களை எமாற்றும் நாடுகள் ?

மறுபடியும் குழப்பம் தமிழர்களை ஏமாற்றும் நாடுகள் ? -

பத்மநாதன் எங்கள் நாட்டில் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து பிரதமர்


புலிகள் அமைப்பின் புதிய தலைவராக செயல்பட்டு வந்த செல்வராசா பத்மநாதன் தங்கள் நாட்டில் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து பிரதமர் அப்சித் வெஜ்யஜிவா கூறியுள்ளார்.

பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.''

பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை என்று உறுதியாக கூறமுடியும்.

அவர் வேறு ஏதோவொரு நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கலாம்'' என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மலேசியாவில் தான் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று் சில இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment