அன்புடன் தோழர்களே,
தேர்தலுக்கு முந்தைய சூழலில் நான் உங்களுக்கு எழுதினேன். நமது சந்திப்பு அப்போது நடக்காமல் போனது .
இப்பொழுதும் பொது செயலாளர் அவர்கள் புது உறுப்பினர் சேர்ப்பில் மிகவும் பரபரப்பாய்உள்ளார்கள் .
அவர்கள் சென்னை வந்ததும் நாம் சந்திக்க ஒரு நாள் கேட்டு கூடுவோம்.
இடைப்பட்ட நாட்களில் உங்களின் சிந்தனைக்கு கீழ் கண்ட வற்றை பதிகிறேன்.
மதிமுகவில் மாணவர் அணியை பலப்படுத்தத் வேண்டியுள்ளது. அனேகமாக எல்லா மாணவர்களும் மதிமுகவின் பெயரில் நல்ல கருத்து கொண்டுள்ளார்கள். அவர்களை சந்தித்து நம் அணியில் சேர வேண்டுகோள் விடுத்தாலே போதும் .
நம் மாணவர் அணி பலம பெரும்.
வெறுமனே எங்களது கட்சிக்கு வாருங்கள் என்று சொல்லுவதை விட, கீழ்க்கண்ட மாணவர் அணியின் உட்பிரிவில் சேவை செய்ய அவர்களை அழைக்கலாம்.
நிச்சயம் அனைத்து மாணவர்களும் விருப்பத்துடன் சேர்வார்கள். அந்த உட்பிருவிகளை பற்றி இப்போது நாம் இங்கே சிறு விளக்கத்தோடு பார்க்கலாம்.
மதிமுக மாணவர் ஈழ அணி
நிதமும் குறைந்தது இரண்டு மணி நேரம் , பெரும்பாலான வேலை இணையத்தில்
ஈழ விசயத்தில் நம் கண் முன்னே உள்ள கீழ் கண்ட பணிகளை செய்வது ஒவ்வொரு மாணவனின் கடமை .
அதை நெறிப்படுத்தி செய்வதற்கு இந்த அணியை அமைக்கலாம்.
இந்த அணி அதன் பணிகளை இடையறாது செய்யவேண்டும் .
ஈழத்தில் நம் உறவுகள் சற்றேனும் நிம்மதியான வாழ்க்கை பெரும் வரை இந்த அணி அவர்களுக்கான கடமையை செய்யும்.
ஈழ தமிழர்களை காக்க இந்தியாவையும் தமிழக அரசாங்கத்தையும் நம்பி இன்னும் மோசம் போகாமல் , நம் கோரிக்கைகளை பிரிடன் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். தமிழகம் முழுதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஈழ ஆதரவு நண்பர்களை பொது மக்களை சந்தித்து குறைந்த பச்சம் பத்து லக்ஷம் கோரிக்கை மனுக்களை பெற்று ஈழத்தில் நம் விருப்பத்தை அந்த நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும் .
ஐநா மற்றும் நமக்கு எதிர்த்து வாக்களித்த மாற்ற நாடுகளின் அலுவலகங்களுக்கு நம் எவ்வறெல்லாம் இலங்கை அரசு மற்றும் இந்திய அரசால் எஅமாற்ற பட்டோம் என்பதை தொடர்ந்து விளக்கி மெயில் அனுப்ப வேண்டும்.
ஈழத்தில் மலையாளிகள் ஏன் தமிழர்களுக்கு எதிராய் உள்ளார்கள் ?
தமிழர்கள் சாவதில் அவர்களுக்கு என்ன விருப்பம்? தமிழ் நாட்டிலுள்ளi மலையாளிகளை சந்தித்து மலையாள உயர் அதிகாரிகளின் துரோக செயல்களை பற்றி பிட் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
மிக முக்கியமாய் கிராம புறங்களில் அடிப்படை ஈழ விஷத்தை விளக்க வேண்டும்.
ஈழ விசயத்தில் காங்கிரஸ் மற்றும் அவர்களோடு சேர்ந்த துரோகிகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாய் திறந்த வெளி சிறையில் இப்போது உள்ள மூன்று லக்ஷம் தமிழர்களை விடுவிக்கும் பொருட்டு உலகின் அனைத்து அமைப்பு களிற்கும் மெயில் கோரிக்கைகளை தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அடுத்து "முல்லிக்கைவயல் " நடந்த மனித படுகொலைகளை நாம் பதிவு செய்ய வேண்டும் .
கச்சதீவில் தமிழக மீனவர்கள் எவாரெல்லாம் இந்திய அரசு மற்றும் இலங்கை அரசால் துரோகம் செய்ய படுகிறார்கள் என்பதனை பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மேலே உள்ள எல்லா பணிகளையும் செய்ய மாணவர்வகள் தேவை என்பதை அவர்களிடம் பேசுங்கள்.
மதிமுக மாணவர் தொழில் நுட்ப அணி
இணையம் மற்றும் கணணி சார்ந்த பணிகளை நாம் அதிகம் செய்ய வேண்டி உள்ளது அதற்காய் இந்த அணியின் அவசியம் உள்ளது. கணணி மட்டும் இல்லாமல் கட்டுமானத்துறை மின்சாரம் கட்டமைப்பு சாலை வசதிகள் நகர்புற கட்டுமானம் கிராமப்புற சாலைகள் மற்றும் பழங்கள் பற்றியும் ஆராய்ந்து கட்டுரைகள் மற்றும் விளக்கம் அளிக்க இந்த அணி மிக அவசியம் ஆகிறது. அந்தந்த துறைகளில் ஈடுபாடுள்ளவர்களை கொண்டு இந்த அணியை பலப்படுத்த வேண்டும்.
மதிமுக மாணவர் கல்வி வேலை வாய்ப்பு அணி
கல்லூரிகளில் சேர்க்கை பள்ளிகளின் தரம் மற்றும் நடைமுறை கல்வி கட்டணம் படித்த பின்பு வேலை வைப்பு போன்றவைகளின் ஆய்வுபநிகளை இந்த அணி செய்யும்.
மதிமுக மாணவர் நிழல் அரசாங்க அணி
மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தில் உள்ள அமைச்சகங்கள் போன்று அத்தனையும் இங்கு நிறுவப்பட்டு அந்தந்த அமைச்சக பணிகளுக்கான பரப்புரை மற்றும் நன்மை தீமைகளை இந்த அணி செய்யும்.
மதிமுக மாணவர் உலக வெப்பமடைதல் அணி
உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலான வெப்பமடைதலை பற்றிய பரப்புரை மற்றும் ஆய்வு பணிகளை இந்த அணி செய்யும்.
மதிமுக மாணவர் விவாசாய மற்றும் தொழில் அனி
விவசாயம் மற்றும் ஆராய்ச்சி பணிகள் பலதரப்பட்ட தொழில் பணிகளை இந்த அனி செய்யும்.
மதிமுக மாணவர் விளையாட்டு அணி
விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அனி செயல்படும். அதற்கான பணிகளை ஆராய்ந்து கருத்துகளை சமர்ப்பிக்கும்.
மதிமுக மாணவர் சாராயம் மற்றும் குடி எதிர்ப்பாளர் அணி
தமிழனை கொள்ளும் கொடிய நோயான குடி பழக்கத்தை எதிர்க்கும் அனி. அந்த களத்தில் இது இயங்கும்.
மதிமுக மாணவர் ஒழுக்க நெறி அணி
யோகா மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகளஇந்த அணியின் கீழ் வரும்.
மதிமுக மாணவர் எழுத்தாளர் அணி
தமிழ் எழுதர்களையும் ப்லோக்கேர்களையும் உருவாக்கும் அனி. தமிழகம் முழுதும பயணித்து எழுத்து ஆர்வம் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும்.
தோழர்களே முதற்கட்டமாய் நாம் மேற்கண்ட அணிகளை அமைய முழு முயற்சி எடுப்போம். நம்மால் முடியும். மாணவர்களை சந்திப்போம் .
ஒவ்வொருவரின் விருப்பு ஏற்ப அவர்கள் அதற்க்கான அணியில் சேர கேட்போம்.
மாணவர்களின் மாநாடு ஒன்றை நடுத்துவோம்.
நல்ல தமிழ் நாட்டை . மறுமலர்ச்சி கொண்ட தமிழ் நாட்டை உருவாகிட மாணவர்களை அழைப்போம். உளமார உண்மையாய் மேற்கண்ட பணிகளை செய்வோம் .
நன்றியுடன்.
தோழர்
Tuesday, June 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி. தோழரே..
ReplyDeleteநான் எதற்கும் தயாராக உள்ளேன்.....
http://anburajabe.blogspot.com
ReplyDelete