Saturday, June 13, 2009

தோழர் ஜீவன் மற்றும் குடுகுடுப்பை அவர்களுக்கு

தோழர் ஜீவன் மற்றும் குடுகுடுப்பை அவர்களுக்கு :-

தோழருக்கு வணக்கம், இங்கே இந்த பதிவு மதிப்பிற்குரிய ''வைகோ'' அவர்களை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு தோன்ற வில்லை. ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடாகதான் தோன்றுகிறது!
///
குடுகுடுப்பையின் தலைப்பு எஅற்றுக்கொள்ளக்கூடியதல்ல அதன் காரணமாகத்தான் நானும் அவரை திட்ட வேண்டி வந்தது.
திட்டியதற்காக வும் அப்படி எழுதும் சூழ்நிலையை குடுகுடுப்பை அவர்கள் உண்டாகியதர்காகவும் வருந்துகிறேன்.
///

ஒரு விஷயத்தை விளக்குங்கள் எங்கள் வைகோவின் வோட்டு வங்கி மெல்ல மெல்ல குறைந்து வருகிறதே அதற்க்கு என்ன காரணம் ?
//
வாக்கு வங்கி குறைந்தது என்பதில் மாறுபட்ட கருத்து வுள்ள்ளது. சென்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பெற்ற வாக்குக்கள் vetrஇ பெற்ற திமுக வின் வாக்குகளை விட பதின்மூன்று லச்சங்கலே வித்தியாசம் . பெற்ற வாக்குகள் அனைத்தும் அதிமுகவினுடையது என்று சொல்ல முடியாதே.

அது போக வாகு வங்கிகளை எப்படி கணிக்கிடுகிறோம் என்பதும் ஒன்று. இந்த தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் மட்டுமே நின்றது . அந்த தொகுதிகளில் வாங்கிய வாக்குகளை மட்டுமே நாம் நாற்பது தொகுதிகளுக்கும் சேர்ந்து வகுத்து பார்க்க இயலாது .
\\\\
இதோ இன்று தமிழின எதிரியாக குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசிடம் அடுத்த தமிழின தலைவராக எதிர் பார்க்கப்பட்ட, எதிர் பார்க்கப்படும் எங்கள் வைகோ தோற்று நிற்கிறார்! அவர் கூட இருந்து தோள் கொடுக்கும் தொண்டர்களுக்கு முறையான விளக்கம் கொடுங்கள்! அவர் கூட இருக்கும் சக தலைவர்களை நம்ப முடியவில்லை !!ஆனால்? அவர் தொண்டர்கள் நிரந்தரமானவர்கள்!

\\\ வைகோ உடைய தோல்விக்கு விருதுநகர் தொகுதி மக்களின் வறுமையும் அறியாமையுமே காரணம்.
தேர்தலுக்கு முந்திய நாள் குறைந்த பட்சம் இரு நூறு ரூபாவிலிருந்து அதிக பட்சம் ஐந்நூறு ரூபாய் காங்கிரஸ் இன் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்த காசுக்கெல்லாம் மயங்கி வாக்காளர்கள் விலை போக மாட்டார்கள் என்று நினைத்தோம் . ஆனால் தோல்வி அடைந்தோம் . அதையும் மீறி நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும் அதில் எங்கள் நிர்வாகிகள் முக்கியமாக கோட்டை விட்டது தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே வைகோ விற்கு விழவேண்டிய வாக்குகளில் கிட்டத்தட்ட ஒரு லாச்சம் வாக்காளர் பட்டியலில் இல்லை. அரசாங்க அதிகாரிகளின் துணையுடன் நடந்த மிகப்பெரும் அவலம் இது.
வைகோவின் வெற்றி இந்த காலகட்டத்தில் மிக முக்கியமாய் இருந்ததது. ஆனால் தமிழுணர்வு இல்லா துரோகிகளால் அது இப்போதைக்கு தள்ளிபபோயுல்லது.
\\\\\
-தோழர்
www.mdmkonline.com


No comments:

Post a Comment