Friday, April 10, 2009

மிகச்சரியான பதிவு .- கருணாநிதியின் குள்ளநரித்தனம்

கருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பிறப்பதை பார்க்கவேண்டும். வயிறெரிந்து சாகவேண்டும்

ரசாயன ஆயுதங்களும் இந்திய ராணுவமும் கருணாநிதியின் சம்மதத்துடனே புகுந்து இந்த தமிழீழ வெற்றியை இப்போது கலைத்தது.

இந்த போரில் கூட வென்றது விடுதலை புலிகளே. இலங்கை பொருளாதார சரிவை சந்தித்து இருக்கிறது . ராணுவ பலத்தை இழந்து நிற்கிறது . மனித நேய விவகாரத்தில் கேட்ட பேரை சம்பாதித்து வைத்துள்ளது. நாளை என்ன செய்யலாம் என்று கூட தெரியாத நிலையில் போரை மட்டுமே நடத்துகிறது .

ஈழம் உலக பார்வையில் வந்துள்ளது . இன்று , நாளை , நாளை மறுநாள் , அடுத்த வாரம், அடுத்த மாதம் , அடுத்த வருடம் கண்டிப்பாக கால சக்கரம் மாறி சுழலும். மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் .

நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .

நியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .

அநீதிகள் வெல்வது போல தெரியும் . ஆனால் இறுதியில் தோற்கும் . அநீதிக்கு ஒரே முறைதான் தோல்வி . அதன் பின்னர் நீதியை தவிர வேறொன்றும் இருக்காது .

ஒரு பக்கம் மேடானால் எங்கோ ஒரு பக்கம் பள்ளமாகிறது . இது தான் நிதர்சன கோட்பாடு . ராணுவம் வெல்கிறது . ஆனால் எங்கோ தோற்கிறது . அது தெரியும் வரை நமக்கு அல்லல்தான்.

ஒரு தமிழனாக சொல்கிறேன், தமிழனிடமே உன் குள்ள நரி வார்த்தை ஜாலங்களை உபயோகிக்கும் உன்னை தமிழ் வரலாறு என்றும் மன்னிக்காது. உன்னை தமிழின துரோகி என்றே வரலாறு நினைவு கொள்ளும். திமுக நீ இறந்தால் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட கோடானு கோடி தொண்டன்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன் ஒரு இரக்கமற்ற தமிழனாக. என்ன செய்வது நம் இனம் அழிவதற்கு துணை போகும் நீ என்று போய் சேர்ந்தால் என்ன. நீ இருந்து யாருக்கு என்ன பயன்.

http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_3724.html

No comments:

Post a Comment